நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும், கேள்விகளை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், அதனால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என திருச்சியை சேர்ந்த அபிஷேக் முகம்மது என்ற மாணவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் , இந்த மனு மீது நாளை மறுநாளுக்குள் (மே 24) பதிலளிக்க சிபிஎஸ்இ தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
No comments:
Post a Comment